Viral Video: அசிங்கமாக பேசிய இரண்டு பேரை செருப்பால் அடித்த பெண்

கான்பூரில் பஞ்ச்புரா பஞ்சாயத்தில், ஒரு பெண் தன்னிடம் அசிங்கமாக பேசிய வாலிபரை செருப்பால் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கிஷான் நகர் கிராமத்திற்கு நடைபெற்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2018, 05:06 PM IST
Viral Video: அசிங்கமாக பேசிய இரண்டு பேரை செருப்பால் அடித்த பெண் title=

கான்பூர்: கான்பூரில் பஞ்ச்புரா பஞ்சாயத்தில், ஒரு பெண் தன்னிடம் அசிங்கமாக பேசிய வாலிபரை செருப்பால் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கிஷான் நகர் கிராமத்திற்கு நடைபெற்றது. 

அந்த வாலிபர்கள் நீண்ட காலமாக பெண்ணை தொந்தரவு (ஈவ் டீசிங்) செய்து வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பெண்ணின் மொபைல் எண்ணை கண்டுபிடித்து, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து அசிங்கமாக பேசி உள்ளனர். மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், முழு விவரத்தையும் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

பெற்றோர்கள் கிராமவாசிகளிடம் தெரிவிக்க, பின்னே பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இந்த பஞ்சாயத்திற்கு இந்த வாலிபர் வர வழைக்கப்பட்டார். அவர்களை அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். பின்னர் அந்த பெண் தான் காலில் இருந்த செருப்பை கழட்டி அந்த வாலிபரின் முகத்தில் மாறி மாறி அடித்தாள். அவளுடன் சேர்ந்து ஒரு சிறுவனும் அவனை செருப்பால் அடித்தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Trending News