சபரிமலை சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா ஏன் கைது செய்யப்பட்டார்!

ஐயப்ப பக்தராக வேடமிட்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் போராளி ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2018, 09:15 AM IST
சபரிமலை சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா ஏன் கைது செய்யப்பட்டார்! title=

ஐயப்ப பக்தராக வேடமிட்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் போராளி ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர் கவிதா ஜக்கால், மாடல் அழகி ரெஹானா பாத்திமா ஆகியோர் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். எனினும் பாதுகாப்பு நலன் கருதி இருவரும் திருப்பி அனுப்பபட்டனர். 

இவர்களில் ஒருவரான எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா கோவிலுக்கு செல்வதற்கு முன் ஐயப்ப பக்தரைப்போல உடையணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக பாத்திமா வீடு தாக்கப்பட்டது. ரெஹானா குறித்து பல விதமான சர்ச்சைகளும் கருத்துகளும் வெளியாகி வந்தன. அவர் ஆபாச படங்களில் நடித்த வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகின. 

இதற்கிடையில் இந்த மதத்தினரை அவர் புன்படுத்தியதாக தெரிவித்து கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் அவரை நீக்கியது. BSNL  நிறுவனத்தில் பணிபுரியும் இவர், இதுவரை இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்டார். எனினும், எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவது, போராட்டங்களில் கலந்துகொள்வது எனச் செயல்பட்டுக் கொண்டே இருந்தார். 

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, ஐயப்ப பக்தர்கள் அணியும் கறுப்பு வேட்டி, சட்டை, மாலை, கையில் ருத்திராட்சம் ஆகியவற்றுடன் `Thathvamasi' என்ற தலைப்பில் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை இட்டார். அந்தப் புகைப்படம், ஐயப்ப பக்தர்களின் மனதை நோகடிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறி, சபரிமலை சம்ரக்ஷன சமிதி என்ற அமைப்பு, பத்தனம்திட்டா மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தது. 

இந்த புகாரின் அடிப்படையில் ரெஹானா மீது சட்டபிரிவு 295A-ன் கீழ் (மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்தல், மத உணர்ச்சிகளையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு கருத்து பதிவிடல்) காவல்துறையினர் வழக்கு பதிந்து ரெஹானாவினை கைது செய்துள்ளனர்!

Trending News