கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டால் பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார்....

தன் மீது சுமத்தப்பட்ட கள்ளத்தொடர்பு புகாரால் மனவேதையடைந்து பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2018, 06:35 PM IST
கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டால் பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார்.... title=

தன் மீது சுமத்தப்பட்ட கள்ளத்தொடர்பு புகாரால் மனவேதையடைந்து பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார்...! 

உத்தரபிரதேச மாநிலம் காம்ஸின் கிராம பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய சாமியார் மாதானி பாபா என்பவர் தனது உறவினர்கள் தன் மீது சுமத்தப்பட்ட கள்ளத்தொடர்பு புகாரால் மனவேதையடைந்த அவர் நவராத்திரி விழாவின் போது தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதயைடுத்து, சாமியார் மாதானி பாபா பாம்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தான் அசிரமம் கட்டுவதை விரும்பாத சிலர் தனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்து வருவதாக கூறியுள்ளார். 

மேலும், அந்த குழு தன்னை ஒரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருவதாக மருத்துவர் பல்வீர் சிங் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

Trending News