ஆசிரியரால் "கற்பை" இழந்த பள்ளி மாணவி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Last Updated : Feb 24, 2018, 11:34 AM IST
ஆசிரியரால் "கற்பை" இழந்த பள்ளி மாணவி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!  title=

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆரம்ப பள்ளி ஒன்றில் அந்த பள்ளியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவி ஒருவரை தனியாக அழைத்து சென்று பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

வீட்டிற்கு திரும்பிய பள்ளி மாணவி பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மேலும் இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இது, தொடர்பாக வழக்கு பதிவு ஆசிரியரை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Trending News