வகுப்பறைக்குள் மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் வாத்தி..!

பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம்!!

Last Updated : Oct 6, 2019, 10:36 AM IST
வகுப்பறைக்குள் மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் வாத்தி..! title=

பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம்!!

சீதாப்புர்: உத்தரப் பிரதேச மாநிலம் மஹ்முதாபாத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் வகுப்பறைக்குள் புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.  

மஹ்முதாபாத் நகரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. வகுப்பறையில் இருந்த ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வெளியானதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், "வகுப்பறைக்குள் ஆசிரியர் புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. ஆசிரியரின் அடையாளத்தை உறுதிப்படுத்த நான் பிரிவு கல்வி அதிகாரியை பள்ளிக்கு அனுப்பியிருந்தேன். வீடியோவில் உள்ள நபருடன் அவரது முகம் பொருந்திய பிறகு, நான் அவரை இடைநீக்கம் செய்தேன்," மாவட்டம் அடிப்படை கல்வி அதிகாரி அஜய் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.

வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்கள் புகைபிடிக்கக் கூடாது என்று குமார் கூறினார். "ஆசிரியர்கள் மாணவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், அவர்கள் புகைபிடிக்கக் கூடாது" என்று அவர் மேலும் கூறினார். வீடியோவின் நம்பகத் தன்மையை தாங்கள் ஆய்வு செய்து வந்ததாகவும், நடந்த சம்பவம் உண்மையானது தான் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொடர்புடைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

 

Trending News