ஆதார் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு நியாயமானது மத்திய அரசு

Last Updated : Aug 24, 2017, 05:30 PM IST
ஆதார் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு நியாயமானது மத்திய அரசு  title=

உச்சநீதிமன்ற தீர்ப்பு பாராட்டுக்குரியது. இந்திய அரசியலமைப்பின் கீழ் 'தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான்' என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கூறியதாவது, "தனியுரிமைக்கான உரிமைகள் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என நாங்கள் கூறியதையே உச்சநீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம் என்றும், மேலும் தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் எனவும் கூறினார்.

 

 

Trending News