உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்: SC கேள்வி

அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 21, 2021, 03:18 PM IST
  • ரூ. 8 லட்சம் எதன் அடிப்படையில் எப்படி நிர்ணயிக்கப்பட்டது.
  • என்ன ஆய்வுகளை மத்திய அரசை மேற்கொண்டது? SC என கேள்வி.
  • வெறும் வருமானத்தை மட்டும் வைத்து எப்படி வருமான உச்ச வரம்பு கணக்கீடு முடியும்.
உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்: SC கேள்வி title=

புது டெல்லி: இந்தியாவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ. 8 லட்சம் எதன் அடிப்படையில் எப்படி நிர்ணயிக்கப்பட்டது. அதற்காக என்ன ஆய்வுகளை அரசு மேற்கொண்டது என மத்திய அரசை நோக்கி உச்சநீதிமன்ற சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

கடந்த ஜூலை 29 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், EWS (Economically Weaker Section) பிரிவுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

கடந்த 7 ஆம் தேதி இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வருமான உச்ச வரம்பாக ரூ. 8 லட்சம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பின் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம் நடராஜ், வருமான உச்ச வரம்பு என்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விசயம் என விளக்கம் அளித்தார். மேலும் இது தேசிய வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்ட முடிவு எனவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கிரீமி லேயருக்கான ஆண்டு வருமான அளவுகோல் ரூ. 8 லட்சம் ஆக உள்ளது என்பதையும் மேற்கோள் காட்டினார்.

ALSO READ |  ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

மத்திய அரசி கூடுதல் தலைமை வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், முன்னேறிய வகுப்பினர்கள் சமூகம், கல்வியில் பின்தங்கியவர்கள் எனக்கூற முடியாது. எனவே பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளுக்கான கிரீமிலேயர் உச்ச வரம்பு எப்படி முன்னேறிய வகுப்பினருக்கு பொருந்தும் எனக் கேள்வி எழுப்பினர்.

அதாவது 10% இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ. 8 லட்சம் எதன் அடிப்படையில் எப்படி நிர்ணயிக்கப்பட்டது. அதற்காக என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது. மத்திய அரசு தரப்பில் சினோ கமிட்டி அடிப்படையில்தான் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த சினோ கமிட்டி அறிக்கையை பார்த்ததே இல்லையே. அந்த அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கிரீமி லேயருக்கான ஆண்டு வருமான அளவுகோல் ரூ. 8 லட்சம் ஆக உள்ளது. இது நியாயமானதுதான். ஆனால் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளுக்கு (SEBC) விண்ணப்பித்த அதே வரம்பை பயன்படுத்த முடியாது.  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வரம்பு ரூ. 8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ |  கல்லூரிகள்- பல்கலைக் கழகங்களில் 2019-20 முதல் 10% இடஒதுக்கீடு அமல்!

அதே வருமான வரம்பு, முன்னேறிய வகுப்பினருக்கு எப்படி பொருந்தும், இதை எப்படி வரையறை செய்தீர்கள், முன்னேறிய வகுப்பினரின் சொத்துகளை கணக்கில் கொள்ளாமல் வெறும் வருமானத்தை மட்டும் வைத்து எப்படி வருமான உச்ச வரம்பு கணக்கீடு முடியும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் 28 ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News