மராட் பிளாட் உரிமையாளர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு -உச்சநீதிமன்றம்!

எர்ணாகுளம் மாவட்டத்தில் மராட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு கட்டிடங்களில் உள்ள பிளாட் உரிமையாளர்களுக்கு தலா ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. 

Last Updated : Sep 27, 2019, 03:00 PM IST
மராட் பிளாட் உரிமையாளர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு -உச்சநீதிமன்றம்! title=

எர்ணாகுளம் மாவட்டத்தில் மராட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு கட்டிடங்களில் உள்ள பிளாட் உரிமையாளர்களுக்கு தலா ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. 

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதை இடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால இழப்பீட்டுத் தொகையை பில்டர்களிடமிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும், பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டின் மீதமுள்ள தொகை ஒரு குழுவால் கணக்கிடப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்கள் அடங்கிய குழு பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை மேலும் மதிப்பீடு செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றம் ஒப்புக் கொண்ட முழு செயல்முறையையும் முடிக்க கேரளா 120 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளது. இந்த செயல்முறையை மேற்பார்வையிடுவதற்கான குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முன்மொழியப்பட்ட பெயர்களின் பட்டியலையும் மதிப்பீட்டு செயல்முறையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

நீதிமன்றம் அறிக்கையின் படி, கடலோர மண்டலத்தில் சட்டவிரோதமாக எந்தவொரு கட்டுமானமும் நடைபெறக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் அக்டோபர் 25-ஆம் நாள் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட மராது பகுதியில் இருந்து அனைத்து கட்டிடங்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்த நேரத்தில், இடிப்பு தீர்ப்பின் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது.

Trending News