சடலுத்துடன் உடலுறவு கொண்டால் தண்டனை கிடையாதா... கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 1, 2023, 05:47 PM IST
  • 2015இல் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
  • சடலுத்துடன் உடலுறவு கொண்டால் அதற்கு தண்டனை அளிக்க விதியில்லை.
  • குற்றவாளி முதலில் பெண் கொன்று அதன்பின் உடலுறவு கொண்டுள்ளார்.
சடலுத்துடன் உடலுறவு கொண்டால் தண்டனை கிடையாதா... கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு! title=

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்தது.

நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, பெண்ணின் சடலத்தை பாலியல் பலாத்காரம் அல்லது இயற்கைக்கு மாறான குற்றங்களின் கீழ் வராது என்று கூறியது."இந்திய தண்டனை சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாக அழைக்க முடியாது என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே, பிரிவு 375 அல்லது 377 விதிகள் இதில் பொருந்தாது" என்று நீதிமன்றம் கூறியது.

"இறந்தவரின் உடலின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐபிசியின் விதிகளை திருத்தம் செய்ய மத்திய அரசு இதன்மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் கிடைத்த நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. 

குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொன்றுவிட்டு, இறந்த உடலுடன் உடலுறவு கொண்டார் என்பது அரசு தரப்பு தெரிவித்துள்ளது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 மற்றும் 377-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பாலியல் குற்றங்களாகவோ அல்லது இயற்கைக்கு மாறான குற்றங்களாகவோ இதனை கருத முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளனர். "இதனை நெக்ரோபிலியா என்று கருதலாம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 வது பிரிவின் கீழ் தண்டிக்க எந்த குற்றமும் இல்லை" என்றனர். 

மேலும் படிக்க | மோடி தலைமையிலான 9 ஆண்டு பாஜக ஆட்சிக்குக் மோர்கன் ஸ்டான்லியின் ’ரிப்போர்ட் கார்ட்’

கொலை மற்றும் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான அவரது மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கொலை செய்யப்பட்டதாகவும் பின்னர் இறந்த உடல் பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாகவும் வாதிட்டார். எனவே, பிரிவு 376 இன் கீழ் குற்றம் பொருந்தாது. அவர் மேலும் வாதிட்டார். இந்தச் செயல் நெக்ரோபிலியா என்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் குற்றவாளியாக்க இந்திய தண்டனை சட்ட்டதால் குறிப்பிட்ட விதி எதுவும் இல்லாததாலும், அவர் விடுவிக்கப்பட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இறந்த உடல் மீதான உடலுறவு, பாலியல் வன்கொடுமை சமமானதா என்பதை ஆராய, நீதிமன்றம் பிரிவு 375 (கற்பழிப்பு) மற்றும் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றை கவனமாகப் படித்து, இந்த வழக்கில் இரண்டும் பொருந்தாது என்று முடிவு செய்தது.

"இந்தப் பொருள் அம்சம் கற்றறிந்த செஷன்ஸ் நீதிபதியால் பரிசீலிக்கப்படவில்லை. இதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றத்தை ஈர்க்கும் எந்த விதியும் இல்லாத நிலையில் ஐபிசியின் 376 வது பிரிவின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை தவறாக தண்டித்துள்ளார்" என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், கொலை குற்றச்சாட்டில் அவரது தண்டனையை உறுதி செய்து, விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தார்.

மேலும் படிக்க | இது தார் ரோடு இல்ல தார்பாய்... ஒத்த கையால் சாலையை தூக்கிய ஊர் மக்கள் - வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News