17 ஆண்டுகளில் சிறப்பான மாநிலங்களவை கூட்டத் தொடர் -வெங்கய்யா நாயுடு

கடந்த 17 ஆண்டுகளில் மாநிலங்களவையில் இந்த முறை நடந்த 249-வது கூட்டத்தொடர்தான் மிகவும் சிறப்பான கூட்டத்தொடர் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 7, 2019, 04:47 PM IST
17 ஆண்டுகளில் சிறப்பான மாநிலங்களவை கூட்டத் தொடர் -வெங்கய்யா நாயுடு title=

கடந்த 17 ஆண்டுகளில் மாநிலங்களவையில் இந்த முறை நடந்த 249-வது கூட்டத்தொடர்தான் மிகவும் சிறப்பான கூட்டத்தொடர் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்!

ஜுன் 17-ம் தேதி தொடங்கி, ஜூலை 27-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டியிருந்ததால் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கூட்டத் தொடர் முடிந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தை முடித்து வைக்கும்முன் மாநிலங்களவையில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு பேசுகையில்., “கடந்த 17 ஆண்டுகளில் இந்த ஆண்டு நடைப்பெற்ற 249-வது கூட்டத்தொடர்தான் மிகுந்த ஆக்கப்பூர்வமானதாக அமைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக, சிறப்பாக அமைந்திருக்கிறது. 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டத்தை சிறப்பாக முடிக்க துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதை பொறுமையாக கவனித்து வருகிறார்கள், அதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டீர்கள்.

இந்த கூட்டத்தொடரில் மிகமுக்கியமான முத்தலாக் தடை சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, மோட்டார் வாகனச் சட்டதிருத்த மசோதா உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

நம்மிடம் உள்ள புள்ளிவிவரங்கள்படி, கடந்த 1978-ஆம் ஆண்டில் இருந்து 41 ஆண்டுகளில் 1984-ஆம் ஆண்டு நடைப்பெற்ற 131 கூட்டத்தொடரில் மட்டும்தான் 37 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன இதுதான் அதிகபட்சம். அதன்பின் 2002-ம் ஆண்டில் 197-வது கூட்டத்தில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 41 ஆண்டுகளில் இந்த ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர 5-வது சிறந்த கூட்டத்தொடர் ஆகும். ஆனால், கடந்த 5 கூட்டத்தொடர்களில் மொத்தமே 33 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த கூட்டத்தொடரில் நேரத்தை 104% சிறப்பாக பயன்படுத்தியுள்ளோம்.

ஏறக்குறைய 17அமர்வுகளுக்கு பின் இது நிகழ்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அவையில் குறைந்தபட்சமாக வேலைத்திறன் 7.44%-மாகவும், அதிகபட்சமாக 65.60%-மாகவும் இருந்தது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபின் கடந்த 2 நாட்களில் எந்தவிதமான மசோதாவும் நிறைவேற்றப்படாமல் இடையூறு இருந்தது. இதனால் அவையின் 19 மணிநேரம் 12 நிமிடங்கள் என மதிப்புமிக்க நேரம் வீணானது. ஒட்டுமொத்தமாக 88 அமர்வுகளில் 173 மணிநேரம் 33 நிமிடங்கள் அவை செயல்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் அதிபகபட்சமாக 35 அமர்வுகள் நடைப்பெற்றுள்ளன. 204 கூட்டத்தில் 38 அமர்வுகள் நடந்திருந்தன. நீண்ட கூட்டத்தொடராக கடந்த 1952-ம் ஆண்டுக்குப்பின், 1955-ஆம் ஆண்டில் 50 அமர்வுகள் நடந்துள்ளன.

இந்த கூட்டத்தொடரில் 151 நட்சத்திர குறியீடு கேள்விகளுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளில் 45 அமர்வுகளுக்குப்பின் இதுதான் அதிகமாகும் என கூறி பெருமிதம் தெரிவித்தார்.

Trending News