இந்தியாவில் குறைந்த விலை ஆயுதங்களை தயாரிக்க ரஷ்யா தொழில்நுட்பத்தை மாற்ற திட்டம்!

இந்தியாவில் குறைந்த விலை ஆயுதங்களை தயாரிக்க ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்பத்தை மாற்றுவதற்காக மோடி பேச்சு!

Last Updated : Sep 4, 2019, 08:58 AM IST
இந்தியாவில் குறைந்த விலை ஆயுதங்களை தயாரிக்க ரஷ்யா தொழில்நுட்பத்தை மாற்ற திட்டம்! title=

இந்தியாவில் குறைந்த விலை ஆயுதங்களை தயாரிக்க ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்பத்தை மாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!!

ரஷ்யாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையில் தொழில்நுட்ப இராணுவ உபகரணங்களை செலவு குறைந்த முறையில் தயாரிக்குமாறு பரிந்துரைத்துள்ளார். தொழில்நுட்பங்கள் மாற்றப்பட்டால், ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களின் உற்பத்தி இந்தியாவில் மலிவாக இருக்கும் என்று டாஸ் ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.

இது உண்மையாகிவிட்டால், இந்தியாவும் ரஷ்யாவும் “இந்த ஆயுதங்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்க முடியும்” என்று பிரதமர் கூறினார். புதுடெல்லி மற்றும் மாஸ்கோ “இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மோடி மேலும் கூறினார்.

பிரதமர் மோடியின் கூற்றுப்படி, இந்தியாவும் ரஷ்யாவும் "வாடிக்கையாளர் மற்றும் இராணுவ தொழில்நுட்பங்களை விற்பவருக்கு இடையிலான உறவுகள்" என்பதில் மட்டுமே ஆர்வம் காட்டவில்லை, இரு நாடுகளின் அரசாங்கங்களும் "தொழில்நுட்பம் மாற்றும் மாதிரி குறித்து உறுதியாக உள்ளன" என்றும் கூறினார். 


ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா நகரை சென்றடைந்தார்!!

இரண்டுநாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகரைச் சென்றடைந்தார். ரஷ்ய அதிபர் புதின்- பிரதமர் மோடி இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தியா- ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார். இன்று காலை விலாடிவோஸ்டக் விமான நிலையத்தில் அவருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றார்.

பிரதமர் மோடி- அதிபர் புதின் இன்று சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து பேசுகின்றனர். இரு நாடுகளின் அரசியல் ரீதியான உறவு குறித்தும் பாதுகாப்பு, வர்த்தகம் , அணுசக்தி குறித்தும் அப்போது ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா -ரஷ்யா இடையே 25 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியுடன் 50 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவும் ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. இக்குழுவுக்கும் ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையே குறைந்தது பத்து வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பார்வையிடுகின்றனர்.

 

Trending News