ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக இயக்குநர் இவர்தான்!

ஏர் இந்தியாவின் புதிய சி.எம்.டி.வாக கரோலா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Nov 28, 2017, 04:44 PM IST
ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக இயக்குநர் இவர்தான்! title=

மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலா ஏர் இந்தியாவின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக இடைக்கால CMD பதவியில் பணிபுரியும் ராஜீவ் பன்சல், தனது பதவியினில் இருந்து விடைப்பெற்று பிரதீப் சிங் கரோலா-விற்கு இடமளிக்கின்றார்.

ஏர் இந்தியாவின் புதிய சி.எம்.டி.வாக கரோலா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, அவர் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News