நாளை முதல் ஏடிஎம்-ல் புதிய ரூபாய் நோட்டுகள்

Last Updated : Nov 10, 2016, 01:29 PM IST
நாளை முதல் ஏடிஎம்-ல் புதிய ரூபாய் நோட்டுகள் title=

நாளை முதல் ஏ.டி.எம். செயல்படும். ரூபாய் 2000, நோட்டுகள் கிடைக்கும்.

ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.

தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துள்ளதால் அதை ஏடிஎம் மையங்களில் நிரப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அத்துடன் 100 ரூபாய் நோட்டுகளும் நிரப்பப்பட்டு வருகின்றன. நாளை முதல் ஏடிஎம் செயல்படும் என்று, அதில் பணம் எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம், 100 ரூபாய் நோட்டுகள் தான் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தற்போது 500 ரூபாய் நோட்டுகள் வராததால் அவை ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவில்லை. 

ஆனால் நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending News