இன்று துவங்குகிறது பிரதமரின் 2-நாள் குஜராத் பயனம்!

Last Updated : Oct 7, 2017, 09:55 AM IST
 இன்று துவங்குகிறது பிரதமரின் 2-நாள் குஜராத் பயனம்! title=

இரண்டு நாள் பயனமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயனத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி குஜராத் மாநிலம், துவாரகா நகருக்கு இன்று செல்லும் பிரதமர், அங்குள்ள துவாரகாதீஷ் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். பின்னர் அங்கிருந்து ஓஹா நகருக்கு இடையே பாலம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கின்றார். பின்னர் அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

ராஜ்கோட்டில் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைப்பது, ராஜ்கோட்-ஆமதாபாத் இடையே 6-வழி சாலை, ராஜ்கோட்-மொர்பி இடையே 4-வழி சாலை அமைப்பது போன்ற திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கின்றார். மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆரம்ப புள்ளியா இந்த பயனம் அமையும் என கூறப்படுகிறது.

இறுதியாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றப்பின் நாளை அவர் டெல்லி திரும்புகிறார்.

Trending News