மகாராஷ்டிர பந்த்: மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் வெடித்தது வன்முறை

மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பேர் தற்கொலைக்கு முயற்ச்சி.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2018, 02:42 PM IST
மகாராஷ்டிர பந்த்: மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் வெடித்தது வன்முறை title=

மகாராஷ்டிர மாநிலத்தின் அரசுப் பணி மற்றும் கல்வி துறையில் எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என மராத்தா சமூகத்தினர் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுடன் மகாராஷ்டிர அரசு பேச்சுவாரத்தை நடத்தி, உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என உறுதி அளித்தது. ஆனால் இதுவரை மராத்தா சமூகத்தினர் கோரிக்கைகளை மகாராஷ்டிர அரசு பரிசீலனை செய்யவில்லை.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் செய்து போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினார்கள். வாகனங்கள் அடுத்து உடைக்கப்பட்டது. 

அவுரங்காபாத் மாவட்டம் காய்காவ் கிராமத்தில் நடந்த மறியல் போராட்டத்தின் போது, மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினர். அப்பொழுது திடிரென 28 வயது உடைய காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் கோதாவரி ஆற்றில் குதித்தார். உடனே அவர் மீடக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மராத்தா சமூகத்தினர், இன்று மாநிலம் முழுவதும் அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா தொண்டர்கள் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், இதன் காரணமாக பண்டர்பூர் செல்ல இருந்த தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

Trending News