ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புகை கசிவு - அவசரமாக பெங்களூரில் தரை இறங்கியது

Last Updated : Jun 15, 2016, 01:58 PM IST
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புகை கசிவு - அவசரமாக பெங்களூரில் தரை இறங்கியது title=

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு மங்களூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் விரைந்து சென்றது. இதில் 65 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் இருந்தனர். சற்று நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து புகை வெளியானது.

இதனால், அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை பெங்களூருக்கே திருப்பி விடப்பட்டது. 10.20 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். நான்கு பயணிகளுக்கு மட்டும் விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமானத்தில் புகை வெளியானததை உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எதனால் புகை வெளியானது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தரப்படவில்லை.

Trending News