ஜெயிஷ் இ தீவிரவாதி அப்துல் மஜீத் பாபா கைது!

ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

Last Updated : May 14, 2019, 12:04 PM IST
ஜெயிஷ் இ தீவிரவாதி அப்துல் மஜீத் பாபா கைது! title=

ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

ஜம்மு காஷ்மீர் சோபூர் மாவட்டத்தில் உள்ள மக்ரேபோரா பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா 2007-ல் டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவன். டெல்லி போலீஸுக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் தப்பியோடிவிட்டனர்.

இதில், அப்துல் மஜீத்துடன் தொடர்புடைய அகமது சஜத் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அப்துல் மஜிதை டெல்லி சிறப்பு போலீசார் தீவிரவாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அப்துல் மஜீத்தனை ஸ்ரீ நகரில் டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவனை விசாரணைக்கு டெல்லி கொண்டுசெல்லப்படுகிறார். 

Trending News