காஷ்மீரில் பயங்கரவாதிகளுடான சண்டையில் ஒருவர் மரணம்; 2 பேருக்கு குண்டு காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2018, 07:14 PM IST
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடான சண்டையில் ஒருவர் மரணம்; 2 பேருக்கு குண்டு காயம் title=

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்மாலூ நகரில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ரோந்து பணியும் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படை திரும்ப சுட்டனர். இந்த சண்டையில் ஒரு பாதுகாப்பு வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வீர மரணம் அடைந்தார். 

மேலும் இரண்டு சிஆர்பிஎப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு குண்டடி பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றன. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த அந்த கடையை சுற்றி வளைத்துள்ளனர். பாதுகாப்பு கருதி பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். பட்மாலூ நகர் முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உசார் படுத்தப்பட்டு உள்ளனர்.

 

 

Trending News