ISIS உடன் தொடர்புகொண்ட தம்பதியர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டனர்!

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவண்ட் - கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த இருவரை தேசிய தலைநகரின் ஓக்லா பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர்.

Last Updated : Mar 8, 2020, 05:35 PM IST
ISIS உடன் தொடர்புகொண்ட தம்பதியர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டனர்! title=

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவண்ட் - கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த இருவரை தேசிய தலைநகரின் ஓக்லா பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜஹான்சீப் சாமி மற்றும் அவரது மனைவி ஹிண்டா பஷீர் பேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் IS அமைப்புடம் தொடர்பு கொண்டவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பல மூத்த ISKP செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், தேசிய தலைநகரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முஸ்லிம் இளைஞர்களைத் தூண்ட முயற்சித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை அமைப்புகளின்படி, அவர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூத்த ISIS உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து பல சான்றுகளை காவல்துறையினர் மீட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையை உறுதிப்படுத்திய டெல்லி காவல் ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா, "ஓக்லாவின் ஜாமியா நகரில் இருந்து கைது செய்யப்பட்ட ISIS-ன் கோரசன் தொகுதிடன் இணைந்த ஒரு ஜோடி ஜஹான்ஜீப் சாமி மற்றும் இந்தா பஷீர் பேக். இந்த ஜோடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

'இந்தியன் முஸ்லீம் யுனைட்' என்ற பெயரில் ஒரு சமூக ஊடக தளத்தை தம்பதியினர் நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இது குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களின் எதிர்ப்புப் பதிவேட்டில் அதிகமான மக்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய அரசின் கோரசன் பிரிவின் பாகிஸ்தான் தளபதி ஹுசைஃபா அல்-பாகிஸ்தானியுடனும் ஜஹான்சீப் சாமி தொடர்பு கொண்டிருந்தார் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர், அவர் காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாத குழுவில் சேர தீவிரப்படுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காவல்துறை தகவல்கள் படி ஜஹான்சீப் சாமியின் மனைவி ஹிண்டா பஷீர் சமூக ஊடகங்களில் IS சார்பு கையாளுதல்களில் தீவிரமாக இருந்துள்ளார், மேலும் குழு தனது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ‘திறமை’ என்று கருதுவதைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

Trending News