பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி 14 முகாம்கள் அழிப்பு, பலி 2 பேர்

Last Updated : Nov 1, 2016, 08:22 PM IST
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி 14 முகாம்கள் அழிப்பு, பலி 2 பேர் title=

சர்வதேச எல்லை பகுதியான மெந்தர், சம்பா ஆகிய இடங்களில் அமைத்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 8 பேர் பலியானார்கள். 

இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் 14 சேதமடைந்தன. இதில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் பலியானர்கள். 2 பேர் காயமடைந்துள்ளனர். 

மேலும் ஆர்.எஸ் புரா பகுதியில் பி.எஸ்.எப்., கொடுத்த பதிலடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன. இரண்டு வீரர்கள் பலியானார்கள். அதேபோல முஷிரா பகுதியில் ஒரு வீரர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர் என எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

 

 

Trending News