காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு: 4 பேர் சுட்டுக்கொலை

Last Updated : May 27, 2017, 09:05 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு: 4 பேர் சுட்டுக்கொலை title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் ராம்பூர் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. 

பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அத்துடன், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்திய எல்லைக்குள் வந்து, பாதுகாப்பு வீரர்களை கொன்றுவிட்டு செல்வதும் தொடர்கதையாகியுள்ளது. 

இப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 தீவிரவாதிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தீவிரவாதிவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

Trending News