மகன் இறந்ததால், தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை!

மேற்குவங்கத்தை சேர்ந்த 68 வயது முதியவர், தனது மகன் இறந்ததை அடுத்து மனவருத்தத்தில் தானும் தற்கொலை செய்துக்கொண்டார்!

Last Updated : Feb 17, 2018, 07:31 PM IST
மகன் இறந்ததால், தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை! title=

கிருஷ்நகர்: மேற்குவங்கத்தை சேர்ந்த 68 வயது முதியவர், தனது மகன் இறந்ததை அடுத்து மனவருத்தத்தில் தானும் தற்கொலை செய்துக்கொண்டார்!

மேற்குவங்காளம் மாநிலம் நாடிய மாநிலத்தின் ஹரிந்தகா பகுதியை சேர்ந்தவர் அமல் பிஸ்வாஸ். நேற்றைய தினம் இவரது மகன் சௌவிக்(23) தனது வீட்டின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்நிலையில் இன்று பிஸ்வாஸ், தனது மகனின் இறப்பின் இழப்பினை தாங்க முடியாமல் தானும் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சௌவிக் வேலையின்மை காரணமாக கடந்த சில நாட்களாக மனவிரக்தியில் இருந்த வந்ததாகவும், விரக்தியின் உச்சியில் அவர் தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடுத்தக்கட்ட விசாரணை செய்து வருகின்றனர்!

Trending News