நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் - கேரளா ஐகோர்ட் வழங்கியது

Last Updated : Oct 3, 2017, 02:07 PM IST
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் - கேரளா ஐகோர்ட் வழங்கியது title=

85 நாட்களுக்கு பிறகு நடிகர் திலீப்புக்கு கேரளா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவான மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். 

இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் கார் டிரைவர் 'பல்சர்' சுனில், வினீஸ் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் திலீப் தரப்பில் பல முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு அனைத்தும் நீதிமன்றம் நிராகரித்து வந்தது. இந்நிலையில், 85 நாட்களுக்கு பிறகு நடிகர் திலீப்புக்கு கேரளா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News