மைக்ரோவேவ் ஓவனுக்குள் குழந்தையை வேக வைத்த ‘சைக்கோ’ தாய்?

டெல்லியில் பிறந்து இரண்டு மாதமே ஆன பெண் குழந்தை மைக்ரோவேவ் ஓவனுக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2022, 03:28 PM IST
  • மைக்ரோவேவ் ஓவனில் இரண்டு மாத பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிப்பு
  • குழந்தையை அதன் தாயே கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்
மைக்ரோவேவ் ஓவனுக்குள் குழந்தையை வேக வைத்த ‘சைக்கோ’ தாய்? title=

தலைநகர் டெல்லியின் சிராத்தில்லி பகுதியை சேர்ந்தவர்கள் குல்ஷம் கவுஷிக் - டிம்பிள் கவுஷிக் தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் அனன்யா எனும் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இதனிடையே இன்று வழக்கம் போல் சமயலறையில் உள்ள மைக்ரோவேவ் ஓவனை திறந்து பார்த்த குல்ஷம் கவுஷிக் அதிர்ச்சியில் உறைந்து போனார். காரணம், பால் மனம் மாறாத அவரது 2 மாத பெண் குழந்தை அனன்யாவின் சடலம் மைக்ரோவேவ் ஓவனுக்குள் இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டெல்லி போலீசார் துணியால் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

குழந்தையின் உயிரிழப்பு குறித்து அனைத்து கோணங்களிலும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தையின் தாய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் தாய் டிம்பிள் கவுஷிக் மனமுடைந்து இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அடிக்கடி கணவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு வந்துள்ளார். 

மேலும் படிக்க | பண்டிகைக்கு கணவர் புடவை வாங்கி தராததால் குழந்தையை அடித்து கொன்ற கொடூர தாய்!!

Shocking

இது குறித்து காவல்துறை இணை ஆணையர் பெனிடா மேரி ஜெய்கர் கூறும்போது, ''குழந்தையின் மரணம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது இன்னும் தெரியவில்லை. பெற்றோர்களான குல்ஷன் கவுசிக், டிம்பிள் ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்து  வந்து விசாரணை நடத்தி வருகிறோம். பெண் குழந்தை பிறந்ததில் அதன் தாய் டிம்பிள்-க்கு விருப்பம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.'' என தெரிவித்தார். 

இது தொடர்பாக குழந்தையின் தாத்தா கூறுகையில், ''குழந்தை அனன்யாவுடன் அவரது தாய் மட்டுமே இருந்ததால் இந்த கொலையை அவர் தான் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்'' என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | பெற்ற கை குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்....

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News