ஏ.என்.-32 விமானம்: 8-வது நாளாக தேடும் பணி தொடர்கிறது

Last Updated : Jul 29, 2016, 07:14 PM IST
ஏ.என்.-32 விமானம்: 8-வது நாளாக தேடும் பணி தொடர்கிறது title=

கடந்த 22ம் தேதி, சென்னையிலிருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற்படை, கடலோர காவல்படை கப்பல்கள் தீவிரமாக தேடி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் சென்னை வந்து தேடும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் பேசிய பாரிக்கர் கூறியதாவது:-  விமானம் மாயமானதற்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. விமானத்தை தேடும் பணியை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். மாயமான விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு இல்லை. தேடும் பணியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Trending News