அதிமுக நிச்சயம் உடையும்- சுப்ரமணியன் சுவாமி

சசிகலா சொல்வதை பன்னீர் செல்வத்தால் செய்ய முடியாது, மேலும் அதிமுக கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 7, 2016, 01:35 PM IST
அதிமுக நிச்சயம் உடையும்- சுப்ரமணியன் சுவாமி title=

புதுடெல்லி: சசிகலா சொல்வதை பன்னீர் செல்வத்தால் செய்ய முடியாது, மேலும் அதிமுக கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் இன்று பேசிய சுப்ரமணியன் சுவாமி, " பன்னீர் என்று தான் அவரை கூப்பிடுவேன். சசிகலா சொல்வதை நிச்சயம் அவரால் செய்ய முடியாது. அதன்பின் இந்த கட்சி தானாக உடையும்." 

அஇஅதிமுக ஒரே கட்சியாக நிலை கொண்டு இருக்காது. சசிகலா இந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக செயல் பட விடமாட்டார். சசிகலா தன்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவரை பன்னீர் செல்வம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வருவார் என்றார் அவர்.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவின் பொருளாளர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

Trending News