காஷ்மீர் புத்காமில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Last Updated : Jul 12, 2017, 08:43 AM IST
காஷ்மீர் புத்காமில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை title=

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைபற்றினர்.

முதற்கட்ட தவலின்படி 3 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இருப்பினும் அவர்களது பெயர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தீவிரவாதிகளின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். 

முன்னதாக நேற்று முன்தினம் இரவு காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவகள் முடுக்கிவிட்டுள்ளது. 

இந்நிலையில் புத்காம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதலில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

Trending News