ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் வாயுக்கசிவு 2 பேர் பலி

Last Updated : Jun 11, 2016, 10:43 AM IST
ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் வாயுக்கசிவு 2 பேர் பலி title=

ஐ.என்.எஸ் கப்பலில் இருந்த கழிவு நீரை அகற்றும் பணியில் 4 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெளிப்பட்ட நச்சுக்காற்றால் நான்கு பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நான்கு பேரில் ரஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீமோகன் தாஸ் என்ற இருவர் பலியாகினர். மற்ற இருவரின் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கர்நாடாகாவில் உள்ள கர்வார் கடற்படை தளத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்து விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை கப்பலாகும். இந்த கப்பலை ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News