இறந்த தாயின் உடலை "மம்மி போல்" பதப்படுத்தி பென்சன் பெற்று வந்த மகன்!

கொல்கத்தாவில் இறந்த தாயின் உடலை 3 ஆண்டுகளாக பதப்படுத்தி பென்சன் பெற்றுவந்த மகன் கைது செய்யப்பட்டார்.

Last Updated : Apr 5, 2018, 06:13 PM IST
இறந்த தாயின் உடலை "மம்மி போல்" பதப்படுத்தி பென்சன் பெற்று வந்த மகன்!  title=

கொல்கத்தாவில் மூன்று வருடம் முன்பு மரணம் அடைந்த பினா மஜூம்தார் என்ற பெண்ணின் உடலை மறைத்து பென்சன் பெற்றுவந்த மகன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுபாபிரதா மஜூம்தார் என்பவர். இவர், லெதர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவரது தயார் பினா மஜூம்தார் ஏப்ரல் 7, 2015ல் மரணம் அடைந்து இருக்கிறார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.

ஆனால், இந்த மரணம் குறித்த தகவல் மிகவும் நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்போதில் இருந்து அவரது உடலை சுபப்ரதா பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி பதப்படுத்தி  மறைத்து வைத்து உள்ளார். 

ஏனென்றால், பினா மஜூம்தார் என்பவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார் அவருக்கு பென்சன் வந்து உள்ளது. மாதம் மாதம் அவருக்கு வரும் ரூ50 ஆயிரம் பென்சனை அவரது கைரேகையை பயன்படுத்தி பெற்று உள்ளார்.

அவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன் உறவினர்கள் வந்த போது, இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர், காவல் துறையினர் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில் இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு சுபாபிரதா அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் மகன் மற்றும் தந்தையை ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Trending News