ஆட்சி அமைக்க தவறிய சிவசேனா; NCP-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்...

மகாராஷ்டிரா ஒரு நீண்டகால அரசியல் நாடகத்தைக் காண்கிறது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முடிவடைந்த 19 நாட்களுக்குப் பிறகும் மாநிலத்தில் எந்த அரசாங்கமும் அமையவில்லை.

Last Updated : Nov 12, 2019, 06:02 AM IST
  • இந்த அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியில், NCP-யின் அஜித் பவார் திங்கள்கிழமை மாலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார், ஆளுநரை சந்திக்க தனது கட்சி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
ஆட்சி அமைக்க தவறிய சிவசேனா; NCP-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்... title=

மகாராஷ்டிரா ஒரு நீண்டகால அரசியல் நாடகத்தைக் காண்கிறது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முடிவடைந்த 19 நாட்களுக்குப் பிறகும் மாநிலத்தில் எந்த அரசாங்கமும் அமையவில்லை.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டத்தின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற சிவசேனா தவறியதால், மகாராஷ்டிராவில் அரசாங்கம் உருவாக்கம் திங்களன்று பல திருப்பங்களை கண்டது. பின்னர் திங்கள்கிழமை மாலை, மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி, மாநிலத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதாவது., மாநிலத்தின் மிகப் பெரிய கட்சியான பாரதிய ஜனதா (105 MLA-க்கள்) மற்றும் சிவசேனா (56-MLAக்கள் உடன் இரண்டாவது) ஆகியவற்றுக்குப் பிறகு, 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது வாய்ப்பு திரும்பியுள்ளது.

முந்தைய நாளில் சிவசேனா பெரும்பாண்மையை நிரூபிக்க நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. மேலும் அக்கட்சி தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறினர். இடையில் காங்கிரசும் NCP-யும் கால்பந்தாட்டம் ஆடியதால் தேவையான எண்ணிக்கையைத் திரட்ட இன்னும் மூன்று நாட்கள் வேண்டும் என்று ஆளுநரிடம் சிவசேனா கோரிக்கை வைத்தனர், எனினும்  அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது.

முன்னதாக சிவசேனா தனது கூட்டணி கட்சியான பாஜக-வை வெளியேற்றிய பின்னர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ்-NCP கூட்டு மற்றும் ஏழு சுயேட்சை MLA-க்களின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதில் தனது கட்சியின் ஆதரவைப் பெற சிவசேனா பாஜக-வுடனான உறவை கடுமையாக்க வேண்டும் என்று NCP செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

NCP மற்றும் சிவசேனா கூட்டணியை உறுதிப்படுத்தும் முயற்சியில் மத்திய கனரக மற்றும் பொது நிறுவன அமைச்சர் மற்றும் சிவசேனா MP அரவிந்த் சாவந்தும் திங்கள்கிழமை காலை நரேந்திர மோடி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து சிவசேனா-NCP  கூட்டணியில் சில சுயேட்சை MLA-க்களின் உதவியுடன் ஆட்சி அமையும் என இறுதி வரையில் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சிவசேனா மேலாளர் உத்தவ் தாக்கரே மற்றும் NCP தலைவர் சரத் பவார் இடையே ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து தாக்கரே மற்றும் பவார் இடையே ஒரு சந்திப்பு மாலை நடந்தது. மும்பையின் ஹோட்டல் தாஜ் லேண்டில் நடைபெற்ற கூட்டத்தில் சிவசேனாவின் இளைஞர் முகம் ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டார். மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைப்பதற்கு சிவசேனாவுக்கு NCP-காங்கிரஸ் ஆதரவைத் தீர்மானிப்பதன் விளைவாக இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.

இந்த அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியில், NCP-யின் அஜித் பவார் திங்கள்கிழமை மாலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார், ஆளுநரை சந்திக்க தனது கட்சி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் சாகன் பூஜ்பால் மற்றும் பிற NCP தலைவர்களுடன் மும்பையில் உள்ள ராஜ் பவனில் கோஷ்யாரியை சந்தித்தார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் NCP-யின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவிக்கையில்., "நாங்கள் மூன்றாவது பெரிய கட்சியாக அழைக்கப்பட்டோம், அது குறித்து எங்கள் கூட்டணி கூட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். நாங்கள் காங்கிரசுடன் பேச வேண்டும், பின்னர் நாங்கள் ஆளுநரிடம் திரும்புவோம் என்று தெரிவித்தார். மேலும் NCP-க்கு ஆளுநர் இன்று இரவு 8:30 மணி வரை, அதாவது செவ்வாய் (நவம்பர் 12) வரை ஆட்சி அமைக்க நேரத்தை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பாஜக முக்கிய குழு கூட்டம், மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமையை 'காத்திருந்து பார்க்க' முடிவு செய்தது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் 105 இடங்களை வென்ற மிகப் பெரிய கட்சி வெளிவந்த போதிலும், பாஜக முன்னதாக அரசாங்கத்தை அமைக்க மறுத்துவிட்டது.

நடந்து வரும் அரசியல் நாடகத்திற்கு மத்தியில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அசௌகரியம் அல்லது வலி இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களுக்கு ரவுத் மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அவர் கடந்த சில நாட்களாக மார்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார் என்று அவரது தம்பி சுனில் ரவுத் தெரிவித்துள்ளார்.

Trending News