ஆபாச நடிகை விவகாரம் மௌனத்தை கலைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஆபாச நடிகை விவகாரம் குறித்து கிட்டத்தட்ட் ஒரு மாதம் கழித்து மௌனத்தை உடைத்தார் அமரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2018, 08:45 PM IST
ஆபாச நடிகை விவகாரம் மௌனத்தை கலைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்பில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுடன் வைத்துக் கொண்ட உறவு வெளியே சொல்லாமல் இருக்க அவருக்கு 1,30000 டாலர் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிட்டி நேஷனல் பேங்கின் வழியாக இவர்களுக்குள் பண பரிமாற்றம் நடைபெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட், ட்ரம்ப் பற்றி எதுவும் கூறாமல் இருக்க இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நாளிதழில் கடந்த 2006-ம் ஆண்டு கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்டீபனி கிளிஃபோர்ட் உறவு வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளது

இச்செய்தி பெரும் புயலை கிளப்பிய சில நாட்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 3_வது மனைவியான மெலானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் கூறியது, இது வெறும் வதந்தி. கடந்த 2011-ம் ஆண்டு முதலே இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வதந்தி குறித்து டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.

இதுக்குறித்து ஸ்டீபனி கிளிஃபோர்ட் கூறுகையில், டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது எனக் கூறியிருந்தார்.

இதுக்குறித்து ஒன்றும் கூறாமல் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ஆபாச நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் நான் எந்த பணமும் கொடுக்கவில்லை எனக் கூறினார்.

Trending News