இலவச யாத்திரை திட்டத்தில் கர்த்தார்பூரை சேர்த்தது டெல்லி அரசு!

மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரைத் திட்டத்தில் கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாராவை சேர்க்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

Written by - Mukesh M | Last Updated : Nov 9, 2019, 01:37 PM IST
இலவச யாத்திரை திட்டத்தில் கர்த்தார்பூரை சேர்த்தது டெல்லி அரசு! title=

மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரைத் திட்டத்தில் கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாராவை சேர்க்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி அமைச்சரவை, கர்தார்பூர் நடைபாதை திறப்புவிழாவிற்கு சற்று முன்னதாக, இந்த முடிவுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது.

ஊடகவியலாளரிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், கர்த்தார்பூர் சாஹிப் டெல்லி-அமிர்தசரஸ்-வாகா எல்லை-ஆனந்த்பூர் சாஹிப் தாழ்வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும், "இது ஒரு முதன்மை ஒப்புதல். நாங்கள் மற்று விவரங்களை உருவாக்கி வருகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாரா இந்திய எல்லையிலிருந்து 4.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தை பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூருடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 24 அன்று கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், கர்த்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தை செயல்படுத்துவதற்கான முறையான கட்டமைப்பை வகுத்தனர். இந்த சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரைத் திட்டத்தில் கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாராவை சேர்க்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது

முகமந்திர தீர்த்த யாத்ரா யோஜனா, டெல்லியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் ஆண்டுக்கு 1,100 மூத்த குடிமக்களுக்கு இலவச யாத்திரை மேற்கொள்ள உதவுகிறது, அதற்கான செலவுகள் முழுவதும் டெல்லி அரசாங்கத்தால் ஏற்கப்படும்.

‘முகமந்திர தீர்த்த யாத்ரா யோஜனா’ என்ற பெயரிடப்பட்ட திட்டம் டெல்லி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே. மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும், அதே சமயம் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தில் ஒரு உதவியாளருடன் தங்கள் யாத்திரையை மேற்கொள்ளலாம்.

டெல்லி-மதுரா-பிருந்தாவன்-ஆக்ரா-ஃபதேபூர் சிக்ரி-டெல்லி, டெல்லி-வைஷ்ணோ தேவி-ஜம்மு-டெல்லி, டெல்லி-ஹரித்வார்-ரிஷிகேஷ்-நீல்காந்த்-டெல்லி, மற்றும் டெல்லி-அஜ்மீர்-புஷ்கர்-டெல்லி ஆகிய இடங்களை இந்த திட்டத்தின் கீழ் டெல்லி அரசு வகுத்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம், முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி-அமிர்தசரஸ்-வாகா எல்லை-ஆனந்த்பூர் சாஹிப்-டெல்லி யாத்திரைக்கான பக்தர்களின் முதல் ரயிலில் கொடியசைத்து துவங்கிவைத்தார். கொடியேற்றும் விழாவில் டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் மற்றும் டெல்லி தீர்த்த யாத்திரை விகாஸ் சமிதியின் தலைவர் கமல் பன்சால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Trending News