#Cauvery: பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி -ஸ்டாலின்!

பிரதமர் வருகைக்கு கருப்புக்கொடி ஏற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்போம் -ஸ்டாலின்..! 

Last Updated : Apr 8, 2018, 12:23 PM IST
#Cauvery: பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி -ஸ்டாலின்!  title=

தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரை 2-வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவங்கினார்...! 

தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில்  தொடர் போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரை நேற்று காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவங்கினார்.

இதைதொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் இருந்து காவிரி உரிமை மீட்பு போராட்டத்தை துவங்கினார்.

இதையடுத்து, மக்களுடன் பேசத்துவங்கிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...! 

பொது கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வந்திருப்பது இந்த ஆட்சியை அகற்றுவதற்காக தான் என்பதை உணர்த்துகிறது. பெண்கள் 4 பேர் இருந்தால் சத்தம் இருக்கும், குழப்பம் இருக்கும்; இங்கு அதிகமான பெண்கள் அமர்ந்து இருந்தும் கட்டுப்பாட்டோடு இருப்பதை பார்க்கும்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

காவிரிக்காக அனைத்து அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது வெற்றி போராட்டமாகியது. காவிரி உரிமை மீட்புக்கான 2-ம் நாள் பயணம் தஞ்சை சூரக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு எள்ளவும் முயற்சிக்கவில்லை. 

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான எங்களை சிறையில் வைக்க இடம் இல்லாததால் மாலையே விடுவித்தனர். காவிரிக்காக திமுக, தோழமை கட்சிகள் சார்பில் நடந்த முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய வெற்றி. காவிரி பிரச்சனைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார்.

திமுக தலைவர் கருணாநிதியை ஈன்றெடுத்தது இந்த மண்ணின் மைந்தனாக பேசி வருகிறேன். தமிழகத்திற்கு வரும் பிரதமர் ஹெலிகாப்டரில் பயணித்தாலும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும். ஹெலிகாப்டரில் சென்றாலும், காரில் சென்றாலும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி. பிரதமர் வரும் போது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

Trending News