கிராம - குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை துவங்கலாம்...

தமிழ்நாட்டில் COVID-19 கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளில் செயல்படும் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Apr 21, 2020, 07:10 AM IST
கிராம - குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை துவங்கலாம்... title=

தமிழ்நாட்டில் COVID-19 கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளில் செயல்படும் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வர்த்தகர்கள் மூலப்பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ள நிலையில் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் சற்று சுவாசிக்க நேரம் கிடைத்துள்ளது.

இதன்படி வெல்லம், சமையல் எண்ணெய், தீக்குச்சிகள், பனை தயாரிப்புகள், மண்பாண்டங்கள், பட்டாசுகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி நடப்பு வாரத்தில் இருந்து மெதுவாக ஓட்டம் எடுக்கும் என்று முழு அடைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் மாநில நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் தகவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

குழு அதன் பரிந்துரைகளுடன் தெளிவாக உள்ளது மற்றும் தொழிலதிபர்கள் கூட தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை முழு அடைப்பு தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். கிராமப்புற தொழில்களைப் பொறுத்தவரை, அவற்றில் பெரும்பாலானவை விவசாயம், தோட்டக்கலை, வேளாண் வனவியல், வனவியல், கைவினைப்பொருட்கள் மற்றும் கால்நடைத் துறையுடன் தொடர்புடையவை. இந்தத் துறைகளுக்கு, தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது, விவசாயத் துறை இப்போது விவசாயிகளுக்கும் கிராமப்புறத் தொழில்களுக்கும் தீவிரமாக சேவை செய்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

முழு அடைப்பு காரணமாக ஜாம், ஊறுகாய், ஸ்வீட் மிக்சர்கள், ஜூஸ் எசென்ஸ் போன்ற உடனடி உணவு கலவை பொருட்களின் உற்பத்தி முடங்கியுள்ளதால் இந்த பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மற்றும்  இது குடிசைத் தொழில்கள் தொடர்பான ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் இதுபோன்ற தயாரிப்புகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் இப்போது அனுமதிக்கப்பட வேண்டும், இந்த தொழில்கள் அனுமதிக்கப்பட்டால் தான் முழு அடைப்பு அகற்றப்படும் போது உணவுப் பொருட்கள் கிடைக்கும் என்றும் தொகுக்கப்பட்ட உணவுகளை கையாளும் மொத்த வர்த்தகர் M ஜோதி குறிப்பிடுகின்றார்.

ஏறக்குறைய உலகின் முழு பகுதியையும் முழு அடைப்பால் முடக்கிவைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை 18,500-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. மற்றும் 592 உயிர்களை பலி வாங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1520 பேரை கொரோனா தாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முழு அடைப்பு வரும் மே 3-வரை எந்த தளர்வுகளும் இன்றி செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும் சில துறைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என விவசாயிகள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

Trending News