வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்!

இன்றைய உலகில், பலர் அலுவலகத்திற்கு சென்று ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்தே சுய தொழில் செய்து, அதன் வழியே வருவாய் ஈட்ட பலர் பழகி விட்டனர். 

Written by - Yuvashree | Last Updated : Feb 2, 2024, 06:27 PM IST
  • இஞ்சி பூண்டு விழுது தொழில்
  • முதலீடு 3-4 லட்சம்
  • இந்தியாவில் இதற்கு தேவை உள்ளது.
வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்! title=

இன்றைய உலகில், பலர் அலுவலகத்திற்கு சென்று ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்தே சுய தொழில் செய்து, அதன் வழியே வருவாய் ஈட்ட பலர் பழகி விட்டனர். கையில் பெரிய முதலீடு இல்லாதவர்கள், தன் கையில் இருக்கும் வேலையை விடாமல், சிறிதாக ஏதேனும் தொழிலை ஆரம்பித்து பின்னர் அதனை பெரிதாக வளர்க்கின்றனர். அதிலும் அத்தியாவசிய தேவை உள்ள பொருட்களுக்கு தேவையும் விநியோகமும் இருந்து கொண்டே இருக்கும். இதனால், இது போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பெரும்பாலும் நஷ்டம் என்பது அவ்வளவு பெரிய தொகையாக இருப்பதில்லை.

இஞ்சி பூண்டு விழுது:

இஞ்சி, பூண்டு விழுதினை பலர் தினசரி அவர்கள் வீட்டில் சமயலுக்கு பயன்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவை தாண்டி, உலகளவில் கூட தற்போது இந்த விழுதினை உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சைவ-அசைவ உணவுகள் என அனைத்திலும் இதை உபயோகப்படுத்தி கொள்ளலாம். இதற்கு உலகளவில் வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் பல கோடி பேர் இதனை தங்களது சமையல் கட்டில் ஒரு அங்கமாக மாற்றியுள்ளனர்.

பலர், இதனை தினசரி தங்கள் சமையலில் சேர்க்கும் வழக்கத்தினையும் கொண்டுள்ளனர். நுரையீரல் பாதுகாப்பு, சிறுநீர்ப்பை பாதுகாப்பு, மலச்சிக்கலை தீர்ப்பது, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்வது என இஞ்சி பூண்டு விழுதில் உடலுக்கு தேவையான பல்வேறு குணநலன்கள் அடங்கியிருக்கின்றன. இது, உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, நோய் பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்குமாம். 

இஞ்சி-பூண்டு விழுதிற்கான தேவை:

மக்கள் பலர், தற்போது Instant Mixes என அழைக்கப்படும் உடனடி உணவுகளை அதிகம் விரும்புகின்றனர். மிளகாய் பொடி, புளிக்குழம்பு, பரோட்டாவில் ஆரம்பித்து, தற்போது பிரியாணி மிக்ஸ் வர பல இன்ஸ்டண்ட் மிக்ஸ்கள் சந்தைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. இதனால் சமையல் வேலை அதிக நேரம் எடுக்காததாலும், எளிதில் முடிவதாலும் அதிகம் பேர் இதனை விரும்புகின்றனர். அப்படி, இன்ஸ்டண்ட் மிக்ஸாக இஞ்சி பூண்டு விழுதையும் விற்கலாம். 

Ginger

வீட்டு சமயலுக்கு மட்டுமன்றி, ஹோட்டல்கள், கேட்டரிங் சேவைகள், கேண்டீன்கள் என மொத்தமாக உணவு தயாரிக்கப்படும் இடங்களில் இன்ஸ்டண்ட் இஞ்சி பூண்டு விழுதிற்கான தேவை அதிகமாகவே உள்ளது. வேலைக்கு செல்பவர்கள், சமையல் தெரியாதவர்கள், சமைக்க நேரமில்லாதவர்கள் என அனைவருக்கும் இந்த இன்ஸ்டன்ட் இஞ்சி பூண்டு விழுது மிகவும் உபயோகமாக இருக்கும். அவர்களிடம், இதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கும். 

இதில் லாபம் வருமா?

சமையலுக்காக உபயோகிக்கும் பொருட்கள், பேஸ்ட் வடிவம் பெற ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது. இவற்றிற்கு எப்போதும் சந்தைகளில் நல்ல தேவையும் இருக்கின்றன. இது போன்ற சமையல் பேஸ்ட் தொழில்களில் இருந்து மட்டும் 55-70 கோடிகள் வரை வருவாய் கிடைக்கின்றதாம். அது மட்டுமன்றி, கடந்த சில ஆண்டுகளாக இது 30சதவிகிதமாக உயர்ந்தும் வருவதாக ஒரு ஆய்வரிக்கை கூறுகிறது. 

இஞ்சி-பூண்டு விழுது தொழிலை, சிறிய முதலீட்டுடன், சிறிய தொழிலாகவே தொடங்கலாம். ஒரு பாக்கெட்டில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இருக்குமாறு அதனை பேக் செய்ய வேண்டும். இதற்கு சமைப்பவர்கள் மத்தியில், குறிப்பாக கிராமப்புறங்களில் தேவை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பேஸ்டுகள், தினசரி உபயோகத்திற்கு பயன்படுவதால் இதற்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 4% DA ஹைக், ஜாக்பாட் சம்பள உயர்வு

இந்தியாவில் இருக்கும் தேவை:

இந்திய சந்தையை பொருத்தவரையில், 2025ஆம் ஆண்டில் கணிசமாக 5 சதவிகிதம் வரை இஞ்சி பூண்டு விழுதின் தேவை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 

இஞ்சி,பூண்டு விழுதினை அதிகம் பயன்படுத்துபவர்கள்:

>வீட்டில் சமைப்பவர்கள்
>ஹோட்டல் வைத்திருப்பவர்கள்
>கேட்ரிங் தொழில் செய்பவர்கள்

முதலீடு எவ்வளவு தேவைப்படும்?

இந்த தொழிலை ஆரம்பிக்க, மூன்று முதல் 4 லட்சம் வரை தேவைப்படலாம். பொருட்கள், மெஷின்கள் என அனைத்திற்கும் சேர்த்து இந்த தொகை ஆகும். 

கவனம்..

இந்த சிறு தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர், நீங்கள் இருக்கும் இடத்தில் அதற்கான தேவை இருக்கிறதா என ஆராய வேண்டும். இதற்கு முன்னர் சிறு குறு தொழில் செய்பவர்களிடம் இதன் நுணுக்கங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | பங்குச்சந்தையில் பீதியை கிளப்பிய Paytm பங்குகள்: பதற்றத்தில் வாடிக்கையாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News