பட்ஜெட்டுக்கு முன் ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

 இந்திய ரிசர்வ் வங்கி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், 500 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2023, 10:52 PM IST
 பட்ஜெட்டுக்கு முன் ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..! title=

RBI's big news: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய நாணயம் தொடர்பாக பல வகையான செய்திகள் வெளிவருகின்றன. உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. ரூ.500 நோட்டு குறித்த தகவல் ரிசர்வ் வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் 2 வகையான 500 நோட்டுகள்

சந்தையில் இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகள் காணப்படுகின்றன. இரண்டு நோட்டுகளுக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. இந்த இரண்டு வகையான நோட்டுகளில் ஒன்று போலி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நோட்டு போலியானது. எனவே உண்மையான குறிப்புகள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Budget 2023: பெட்ரோல், தங்கம் விலைகள் அதிகரிக்குமா! அதிர்ச்சி தருவாரா நிதியமைச்சர்!

ஆர்பிஐ ரூபாய் தாள்கள்

ஆர்பிஐ 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படியே நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும். ஆனால், அதனைப் போலவே சில போலி ரூபாய் தாள்களும் அச்சிடப்பட்டு, மார்க்கெட்டில் விடப்படுகிறது. இதைத் தான் சமூகவலைதளத்தில் பரவும் வீடியோவிலும் இருப்பதை பிஐபி சுட்டிக்காட்டியுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம், மகாத்மா காந்தியின் புகைப்படம் உள்ளிட்டவை உண்மையான ரூபாய் தாள்களில் இருக்கும். காந்திஜியின் புகைப்படத்துக்கு அருகாமையில் பச்சை கம்பி ஒன்று இருக்கும். 

போலியாக பரவும் புகைப்படம்

ஆனால் இணையத்தில் பரவும் புகைப்படம் ஒன்றில் மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு அருகாமையில் பச்சைக் கம்பி இருக்கும் 500 ரூபாய் தாள் இருந்தால், அது போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் வாங்க வேண்டாம் என கூறிப்பட்டுள்ளது. இது போலியான தகவல் என விளக்கியுள்ள பிஐபி, மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு அருகாமையில் பச்சைக் கம்பி இருந்தாலும் உண்மையான தாள் தான் என கூறியுள்ளது. போலி ரூபாய் தாள்களை அடையாளம் காண பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், உண்மை தாளை போலி என பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப் மூலம் எல்ஐசி-யின் இந்த சேவைகளை பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News