8th Pay Commission ஜாக்பாட் அப்டேட்: 50% அகவிலைப்படி, 44% ஊதிய உயர்வு, அரசின் பரிசு விரைவில்!!

8th Pay Commission: 8வது ஊதியக்குழு விரைவில் வரவுள்ளதா? அப்படி புதிய ஊதியக்குழு வந்தால், ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 8, 2023, 12:33 PM IST
  • அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், அதன் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் கணக்கிடப்படும்.
  • எனினும், இப்படிப்பட்ட ஊதிய திருத்தம் செய்ய புதிய ஊழதியக்கமிஷனை அமைக்கவேண்டியது மிக முக்கியமாகும்.
  • ஆகையால் அரசு அடுத்த ஆண்டிற்குள் இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்க்கப்படுகின்றது.
8th Pay Commission ஜாக்பாட் அப்டேட்: 50% அகவிலைப்படி, 44% ஊதிய உயர்வு, அரசின் பரிசு விரைவில்!! title=

8th Pay Commission Latest Update: மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில காலமாக அரசிடம் சில கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும். இவற்றில் சமீபத்திய நாட்களில் 8வது ஊதியக்குழு பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. உண்மையில் 8வது ஊதியக்குழு விரைவில் வரவுள்ளதா? அல்லது இந்த முறை புதிதாக ஒரு முறை வருமா? அப்படி புதிய ஊதியக்குழு வந்தால், ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு

மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் சம்பள கமிஷன் வரும்போது மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து அரசுக்கு இதுவரை எந்த யோசனையும் இல்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தெளிவுபடுத்தினார். அத்தகைய முன்மொழிவு எதையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று அவர் கூறினார். எனினும் அரசின் இந்த நிலைப்பாடு மாறக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணமும் உள்ளது. அவற்றை பற்றி விரிவாகக் காணலாம்.

50 சதவிகித (50% DA) அகவிலைப்படி 

தற்போது ஜூலை 2023-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike) பற்றிய அறிவிப்பிற்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அகவில்லைப்படி 3 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என சிலரும் 4 சதவிகிதம் அதிகரிக்கும் என சிலரும் கூறி வருகிறார்கள். எனினும், அகவிலைப்படி அதிகரிப்பின் அடிப்படையான ஏஐசிபிஐ குறியீட்டை வைத்து பார்த்தால், அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. அந்த நிலையில், ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். அதன் பிறகு ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படியும் 4 சதவிகிதம் அதிகரித்தால், அதன் பின்னர் ஊழியர்களின் அகவிலைபடி 50% -ஐ எட்டும். 

மேலும் படிக்க | GPS vs OPS: அதிகபட்ச ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டம் எது? முழு ஒப்பீடு இதோ

அகவிலைப்படி (Dearness Allowance) 50% -ஐ எட்டினால், அதன் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் கணக்கிடப்படும். எனினும், இப்படிப்பட்ட ஊதிய திருத்தம் செய்ய புதிய ஊழதியக்கமிஷனை அமைக்கவேண்டியது மிக முக்கியமாகும். ஆகையால் அரசு அடுத்த ஆண்டிற்குள் இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்க்கப்படுகின்றது. 

மாறாக, ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் (Fitment Factor) மாற்றங்களை செய்தும் ஊதிய திருத்தம் செய்யலாம். தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாக உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து  ரூ.26,000 ஆக உயரும்.

பொதுத் தேர்தல்கள்

அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஆதரவை பெற அரசு அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான அடுத்த ஊதியக்கமிஷனை அமைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசின் நோக்கம் என்ன?

சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. ஆனால், என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. 

மேலும் படிக்க | EPFO ஜாக்பாட் அப்டேட்: அடிச்சுது லாட்டரி.. விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News