மகிழ்ச்சி செய்தி! ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு இந்தத் தேதியில் இருந்து அமலுக்கு வரும்!

7வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக உயர்ந்து இருக்கிறது, 6-வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு 15% உயர்வு சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 24, 2022, 01:31 PM IST
  • நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்ந்துள்ளது.
  • 7வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக உயர்ந்து இருக்கிறது.
  • ஊழியர்களின் அகவிலைப்படி 189% ஆக உயர்ந்துள்ளது.
மகிழ்ச்சி செய்தி! ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு இந்தத் தேதியில் இருந்து அமலுக்கு வரும்! title=

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து கூறியதிலிருந்து பல மாநிலங்களும் அவற்றின் ஊழியர்களுக்கு அகவிலைப்படிகளை அதிகரித்து வருகிறது.  அந்தவகையில் சத்தீஸ்கரில் அரசு ஊழியர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தியுள்ளது.  கடந்த செய்வ்வாய்கிழமையன்று சத்தீஸ்கர் நிதித்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இந்த 6% உயர்வுக்கு பிறகு அரசு ஊழியர்களின் அக்கவிளைபப்டி மொத்தம் 28% ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோதிலும் ஊழியர் அமைப்புகள் இன்னும் அவர்களுக்கான அலோவன்ஸை 12% அதிகரிக்க வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையில் மிக உறுதியாக இருந்து வருகின்றனர்.  தற்போது மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 7வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக உயர்ந்து இருக்கிறது, அதோடு சேர்த்து ஆறாவது ஊதியக்குழு ஊழியர்களுக்கு 15% உயர்வு சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அகவிலைப்படி 189% ஆக உயர்ந்துள்ளது, இது ஆகஸ்ட் 1, 2022 முதல் பணமாக வழங்கப்படும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, இந்த தேதியில் வரும் டிஏ ஹைக் அறிவிப்பு!!

இதுகுறித்து கன்வீனர் கமல் வர்மா கூறுகையில், முதல்வர் அமைத்த இரண்டு செயலாளர்கள் குழுவுடன் இரண்டு சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது, அதில் 12% டிஏ ஒப்பந்தம் செய்யப்பட்டது.  வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத சில அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலமைச்சருடன் இணைந்து 6%க்கு உடன்பட்டனர், ஆனால் நாங்கள் 6% நிராகரித்தோம்.  மேலும் கூறுகையில் ஊழியர் அமைப்புகள் அவர்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளனர், 12% க்கும் குறைவாக நாங்கள் ஏற்கமாட்டோம்.  மேலும் அந்த அலோவன்ஸ் குறிப்பிட்ட தேதிக்குள் எங்களுக்கு வந்து சேர வேண்டும், அரசு எங்களது கோரிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ரூ. 50,000-லிருந்து ரூ.95,000 வரை சம்பளம் உயர வாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News