7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு

7th Pay Commission: இந்த நவராத்திரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்து விட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2022, 12:53 PM IST
  • அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும்.
  • மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக இந்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: இந்த நவராத்திரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்து விட்டது. அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 30 முதல், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் புதிய அகவிலைப்படி சேர்க்கப்படும். மேலும் செப்டம்பர் 28 ஆம் தேதி மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. 

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 

அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 30 முதல் புதிய அகவிலைப்படியைச் சேர்த்து ஊதியம் கிடைக்கும். செப்டம்பர் 28 ஆம் தேதி, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கும். அதன் அரசாங்க அறிவிப்பு குறிப்பாணையும் அன்று மாலை வெளியிடப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு வெளியாகும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகவிலைப்படி 38% ஆக உயரும் 

இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும். இந்த உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக இந்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய ஊழியர்களுக்கு இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இந்த நிலுவைத்தொகை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகையாக இருக்கும். 

மேலும் படிக்க | இந்த தேதியில் வெளியாகிறது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி உயர்வு? 

சம்பளம் எவ்வளவு உயரும்

- 7வது ஊதியக்குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900 ஆகவும் உள்ளது. 

- 38 சதவீத டிஏ உயர்வின்படி, ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில் ஆண்டு டிஏவின் மொத்த அதிகரிப்பு ரூ.6840 ஆக இருக்கும். 

- மாத அதிகரிப்பு ரூ. 720 ஆக இருக்கும். 

- அதிகபட்ச அடிப்படை சம்பளமான ரூ.56,900 இல், ஆண்டு அகவிலைப்படியின் மொத்த அதிகரிப்பு ரூ.27,312 ஆக இருக்கும். 

- மாதத்திற்கு ரூ.2276 அதிகரிப்பு இருக்கும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News