7th Pay Commission: 2023-ல் ஊழியர்களுக்கு ஜாக்பாட், 5% அதிகரிக்குமா டிஏ?

7th Pay Commission: 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் இருக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2022, 04:30 PM IST
  • செப்டம்பர் மாதத்தில் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமான டிஆர்-ஐ அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியது.
  • இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர்.
  • தற்போது, ​​மத்திய பணியாளர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்படுகிறது.
7th Pay Commission: 2023-ல் ஊழியர்களுக்கு ஜாக்பாட், 5% அதிகரிக்குமா டிஏ? title=

7வது ஊதியக்குழு சமீபத்திய அப்டேட்: வரும் ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் இருக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு மதிப்பீட்டின்படி, மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.

தீபாவளியின் போது டிஏ உயர்வு ஏற்பட்டது

தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. எனினும், அரசு ஊழியர்கள் 18 மாத கால நிலுவைத் தொகைக்காக இன்னும் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமான டிஆர்-ஐ அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர். தற்போது, ​​மத்திய பணியாளர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்படுகிறது.

2023-ல் இந்த அகவிலைப்படி எவ்வளவு உயரும்? 

அடுத்த ஆண்டு மார்ச் 2023 இல் மீண்டும் அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, 3-5 சதவீதம் வரை டிஏ உயர்வு இருக்கக்கூடும். இந்த உயர்வு நடந்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 43 சதவீதமாக உயரும். இதன் காரணமாக மத்திய ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச்சில் டிஏ உயர்வு? சம்பளம் இவ்வளவு உயருமா? 

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

மத்திய ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் அகவிலைப்படி அதிகரிப்பு பரிசாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு மார்ச் 2023 இல் ஹோலியை ஒட்டி அறிவிக்கப்படும். அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி உயர்வு 42 சதவீதத்தை எட்டும். இதன் காரணமாக குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் மாதம் ரூ.720 உயர்த்தப்படும்.

அதிகபட்ச சம்பள வரம்பிற்கு, இந்த உயர்வு மாதத்திற்கு ரூ.2276 என்ற விகிதத்தில் இருக்கும். தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்-தொழில்துறை தொழிலாளர்களின் (AICPI) புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 131.2 ஆக இருந்தது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் 2022 வரை ஏஐசிபிஐ குறியீட்டில் மொத்தம் 2.1 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.1 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 7th pay Commission: 3 தவணைகளில் கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? அப்டேட் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News