7th Pay Commission: அகவிலைப்படி உயர்வால் கிடைக்கும் பம்பர் ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ

7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும். அதாவது, ஜூலை முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 12:54 PM IST
  • அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
  • அரச ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வால் கிடைக்கும் பம்பர் ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ title=

7வது ஊதியக்குழு, அகவிலைப்படி கணக்கீடு: மத்திய அமைச்சரவை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஜூலை 2022க்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வின் மூலம், தற்போதுள்ள 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகின்றது

அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும். அதாவது, ஜூலை முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை கிடைக்கும். அதாவது செப்டம்பர் மாத சம்பளத்துடன் ஜூலை-ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. முதல் திருத்தம் ஆண்டின் துவக்கத்தில், ஜனவரி முதலும், இரண்டாவது திருத்தம் ஜூலை மாதம் முதலும் அமலுக்கு வருகின்றன. 

தற்போது அகவிலைப்படி அதிகரித்த பின்னர், செப்டம்பர் மாத சம்பளமாக ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு கூடுதல் தொகை வரும் என்ற கணக்கீட்டை இங்கே காணலாம். ஊழியர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் கணக்கீட்டை இங்கே காணலாம். 

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 4% உயர்ந்தது அகவிலைப்படி, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ 21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைபப்டியில் ஏற்றம் 21,622-19,346 = ரூ 2276/மாதம் அதிகரித்தது
5. ஆண்டு ஊதிய உயர்வு 2276 X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைபப்டியில் ஏற்றம் 6840-6120 = ரூ. 720
5. ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ 8640

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

இதன்படி அதிகபட்சமாக ரூ.56,900 அடிப்படை சம்பளம் உள்ளவர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.2276 அதிகரிக்கும். அதேபோல், ரூ.18,000 குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உள்ளவர்களின் சம்பளத்தில் மாத அடிப்படையில் ரூ.720 வித்தியாசம் இருக்கும். இதன் படி ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். அதாவது, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகபட்ச அடிப்படை சம்பளம் உள்ளவர்களின் கணக்கில் ரூ.6780 கூடுதலாக வரும். குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் இந்த தொகை ரூ.2160 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News