7th Pay Commission: 3% டிஏ உயர்வுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை அறிவிப்பு!

7th Pay Commission: ஜூன் 2023 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட 9,000 ஸ்பிட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குவதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்தார்.    

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2023, 08:13 PM IST
  • ஹிமாச்சல பிரதேச அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது.
  • அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ரூ.500 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.
  • டிஏ உயர்வால் அரசு ஊழியர்களுக்கு தற்போது 34% டிஏ கிடைக்கிறது.
7th Pay Commission: 3% டிஏ உயர்வுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை அறிவிப்பு! title=

7th Pay Commission: ஹிமாச்சல பிரதேச அரசு தனது 2.15 லட்சம் ஊழியர்கள் மற்றும் 1.90 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மாநில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதம் உயர்த்தியுள்ளது.  அகவிலைப்படி உயர்வின் மூலம் முன்னர் 31 சதவீதம் டிஏ பெற்று வந்த ஊழியர்கள் இப்போது 34 சதவீத டிஏவைப் பெறுவார்கள்.  இந்த 3% அகவிலைப்படி உயர்வால் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கருவூலத்தில் சுமார் ரூ.500 கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.  ஜூன் 2023 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட 9,000 ஸ்பிட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குவதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்தார்.  

மேலும் படிக்க | ஓட்டுநர்களுக்கு நற்செய்தி... இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் - 6 மாதத்தில் வரும் புது திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த பிறகு, அரசாங்கம் இந்த ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படியை மேலும் 4 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது.  மத்திய அரசு ஒரு ஃபார்முலா அடிப்படையில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை திருத்துகிறது. இதற்கான சூத்திரம் பின்வருமாறு, அகவிலைப்படி சதவீதம் = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில் -115.76)/115.76)x100.

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சதவீதம் = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33)x100.  முன்னர் செப்டம்பர் 28, 2022 அன்று அகவிலைப்படியில் திருத்தும் மேற்கொள்ளப்பட்டது, இது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது.  அகில இந்திய அளவில் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 38 சதவீதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News