கோதாவரி ஆற்றில் படகில் தீ விபத்து: 80 பேர் காயம்!

ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 80 பேருடன் சென்ற சுற்றுலா படகில் தீவிபத்து ஏற்பட்டது!  

Last Updated : May 11, 2018, 01:51 PM IST
கோதாவரி ஆற்றில் படகில் தீ விபத்து: 80 பேர் காயம்! title=

ஆந்திரா கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகில் 80 பேர் பயணம் செய்தாக கூறப்படுகிறது. தீக்கான காரணம் குறித்து தகவல் இல்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பயணிகளை பத்திரமாக மீட்டனர். காயமடைந்தவர்களை தீ அணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

படகில் பயணம் செய்தவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News