இந்தியாவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் - சீனா

Last Updated : Jun 30, 2017, 02:09 PM IST
இந்தியாவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் - சீனா title=

சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதனால், டோங்லாங் பகுதியில், இந்தியா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ராணுவத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இந்தியா கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ சாங் கூறியதாவது:- .

டோங்லாங்கில் இந்திய ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போட்டோக்களை காட்டி, இது எப்போதும் இல்லாத நடை முறையாக உள்ளது. சட்ட விரோதமாக இங்கு முகாமிட்டிருக்கும் இந்திய ராணுவம் தனது படைகளை வாபஸ் பெறுவதே சிறந்தது. இக்கருத்தை இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இப்பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவு தடைபடாது.

மேலும் இங்கு சீன ராணுவத்தின் அன்றாட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்திய ராணுவம் முயற்சிக்கிறது. அது நல்ல தல்ல சீனா தனது பகுதியில் அதன் இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. 

எனவே, இந்தியா தனது ராணுவத்தை சிக்கிம் எல்லையில் இருந்து வாபஸ் பெற வேண்டும். இல்லாவிடில் 1962-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம் என்றார்.

Trending News