அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து 2000 ரூபாயிக்கு மேல் நிதிபெற தடைவிதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி புதிய மனு ஒன்று, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
27 ஆம் ஆத்மி எம்எல்ஏ- க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக அவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் ஜனாதி பதி மாளிகை மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே காலியான இடங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
அதிமுக நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 3 இடங்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும். 4-வது வேட்பாளருக்கும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.76 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.
முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அமைக்க பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்று தங்கள் அரசு மக்களுக்காக செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறையும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மக்கள் அளிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்..
கிடைத்த தகவல் படி புதுச்சேரியில் 12 மணி வரை 32.16% வாக்குப்பதிவாகியுள்ளது.
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவித வாக்கினைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டு பதிவு காலை தொடங்கியது. வாக்குப் பதிவு துவங்கிய முதலே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் போட்டனர். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலே செலுத்தினர்.
தேர்தல் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கணக்கில் வராத பெரிய அளவு பணம் வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்ததால் அன்னூரில் உள்ள திமுக தலைவர் வீட்டை சோதனையிட்டதாகவும் என போலிசார் தெரிவித்தனர்.
மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
திமுக தலைவர் சண்முகம் வீட்டில் தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று தேர்தல் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.