ஜம்மு-வில் ஊடுருவ முயற்சித்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைப்பகுதியில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்! 

Last Updated : Jun 6, 2018, 10:39 AM IST
ஜம்மு-வில் ஊடுருவ முயற்சித்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! title=

ஜம்மு-காஷ்மீரின் எல்லைப்பகுதியில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்! 

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் பிடிபட்டான். எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து வந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சில் பகுதியில் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மச்லி பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளாரா என பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Trending News