உங்கள் WhatsAppஐ யாராவது அணுகிறார்களா? தவிர்க்க Tricks & Tips

உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் தனிப்பட்ட உரையாடல், படங்கள், வீடியோக்கள் என உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாராவது அனுமதியின்றி அணுகுகிறார்களா? தொழில்நுட்ப ரீதியில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க சிறந்த குறிப்புகளை நிபுணர்கள் கூறுகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2020, 09:06 PM IST
  • உங்கள் WhatsAppஐ யாராவது அணுகவில்லை என்று சொல்லிவிட முடியுமா?
  • மோசடிகளை தவிர்க்க இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்
  • வங்கிகளுடன் இணைந்து செயல்படவிருக்கிறது வாட்ஸ்அப்
உங்கள் WhatsAppஐ யாராவது அணுகிறார்களா? தவிர்க்க Tricks & Tips title=

புதுடெல்லி: உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் தனிப்பட்ட உரையாடல், படங்கள், வீடியோக்கள் என உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாராவது அனுமதியின்றி அணுகுகிறார்களா? தொழில்நுட்ப ரீதியில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க சிறந்த குறிப்புகளை நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்தியாவில் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் (WhatsApp) செயலி. நம்மில் பெரும்பாலோர் பல்வேறு நோக்கங்களுக்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம்.  உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் அணுகவில்லை என்று உறுதியாக சொல்லிவிட முடியுமா?  நமது அந்தரங்க விஷயங்களில் யாராவது தந்திரமாக முயன்றால் அதை சாமார்த்தியமாக முறியடிக்க இந்த குறிப்புகள் உதவும்.

Also Read | 5G Smartphones: 2021-ல் வரவிருக்கும் அட்டகாசமான ஃபோன்கள் இவைதான்

1- இரட்டை அங்கீகாரம்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப்-இன் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் (Videos)யாருக்கும் கிடைக்க வேண்டாம் என்பதை இரட்டை அங்கீகாரத்தை (Two-factor authentication) எப்போதுமே செயல்படுத்தவும்.

2- கைரேகை பூட்டு (Finger print lock)

உங்கள் வாட்ஸ்அப் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்களைப் பாதுகாக்க கைரேகை மூலம் (Finger print lock) பூட்டிவிடலாம்.

Also Read | LED TV, Fridge, Washing Machine-இவற்றின் விலை 2021-ல் 10% வரை உயரக்கூடும்

முன்னதாக, வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) இப்போது இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவிருப்பதாக அறிவித்திருந்தது. 

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு, பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான வாட்ஸ்அப் கட்டண சேவை நவம்பர் மாதத்தில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India (NPCI)) ஒப்புதல் பெற்றது, 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) இணைந்து செயல்படவிருக்கிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப் தனது யுபிஐ பயனர் தளத்தை தரப்படுத்தப்பட்ட முறையில் விரிவாக்க முடியும், பதிவுசெய்யப்பட்ட பயனர் தளத்தில் 20 மில்லியன். "UPI ஒரு உருமாறும் சேவையாகும், இதற்கு முன்னர் எங்கள் டிஜிட்டல் (Digital), பொருளாதாரம் (Economic) மற்றும் நிதி பரிமாற்றம் ஆகியவற்றின் நன்மைகளை அதிக அளவில் பயனர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை நாங்கள் கூட்டாகக் மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியாவின் வாட்ஸ்அப்பின் தலைவர் அபிஜித் போஸ் (Abhijit Bose) கூறினார். பேஸ்புக் நடத்திய 'Fuel for India' என்ற மெய்நிகர் நிகழ்வின் து இதை அபிஜித் போஸ் தெரிவித்தார்.

Also Read | இனி ஆதார் அட்டை மூலம் ஷாப்பிங் செய்யலாம்; Paytm, Google Pay-யின் கதி என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News