பசுமைவழி சாலையால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் -EPS!

பசுமைவழி சாலையால் தொழிற்சாலைகள் வளரும்; தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என முதலமைச்சர் பேச்சு!!

Last Updated : Jul 1, 2018, 02:57 PM IST
பசுமைவழி சாலையால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் -EPS! title=

பசுமைவழி சாலையால் தொழிற்சாலைகள் வளரும்; தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என முதலமைச்சர் பேச்சு!!

கிருஷ்ணகிரியில் நடந்த திருமண விழாவில் தமிழக முதலவர் பழனிசாமி 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து வைத்தார். இதையடுத்து அவர் பேசுகையில், நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். நான் அரசியல் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் என்று கூறினார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், எட்டு வழி பசுமை சாலை நவீன முறையில் அமைக்கப்படுகிறது. இந்த சாலையால் தொழிற்சாலைகள் வளரும். 

தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழி சாலையை எதிர்ப்பவர்கள், அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். 

தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 70 லட்சம் அளவிற்கு கூடுதலாக உயரும். அ.தி.மு.க. தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி.  செயல்படாத தலைவரான ஸ்டாலினை செயல் தலைவர் என சொல்லி கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்! 

 

Trending News