திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டிற்கு வந்தது! பழைய முனையம் முடங்கியது!

Trichy International Airport : திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது! பழைய முனையத்தில் இருந்து இனி எந்தவித விமான போக்குவரத்தும் கிடையாது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2024, 01:25 PM IST
  • திருச்சி சர்வதேச விமான நிலையம் அப்டேட்
  • புதிய விமான நிலைய முனையம் செயலுக்கு வந்தது
  • பழைய முனையம் இனி பயணிகளை கையாளாது
திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டிற்கு வந்தது! பழைய முனையம் முடங்கியது! title=

திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய  முனையம் இன்று முதல்  செயல்பட துவங்கியது. ஏற்கனவே உள்ள முனையம்  மூடப்பட்ட நிலையில், இனி பழைய முனையத்தில் இருந்து இனி எந்தவித விமான போக்குவரத்தும் நடைபெறாது. அத்துடன், பழைய விமான முனையத்தில் பயணிகளுக்கு கையாளுவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.  

தமிழ்நாட்டில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட துவங்கிய புதிய முனையத்தில் வருடத்திற்கு 4.5 மில்லியன் (45 லட்சம்) பயணிகளை கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. .ஒரே சமயத்தில் 10 விமானங்களில்  உள்ள பயணிகளை கையாளலாம்.  புதிய முனையத்தில்  ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள்  தரையிறங்கும் வசதி உள்ளது 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் தரையிறங்கி புறப்படலாம்.

திருச்சி விமானநிலையம்

சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும்  நிகழ்வை கொண்டாடினார்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ம் ஆண்டு  வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  3 ஆண்டுகளுக்குள் புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம்  02.01.2024 அன்று திறந்து வைத்தார்.

ஒரே நேரத்தில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் கையாளலாம். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணி களின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்புகோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம், ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தமிழிசைக்கு சவால் விட்ட திருச்சி சூர்யா! பாஜகவில் இருந்து விலகுகிறேன் - பரபரப்பு பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News