தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்: வானிலை அறிக்கை

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், கன மழை பெய்யக் கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 01:11 PM IST
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்:  வானிலை அறிக்கை title=

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், கன மழை பெய்யக் கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது.

31.10.2021 முதல் 02.11.2021 வரை: (ஆரஞ்சு எச்சரிக்கை) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.11.2021, 04.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
பரங்கிப்பேட்டை (கடலூர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நன்னிலம் (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை),  தலா 5,தேவகோட்டை (சிவகங்கை), காரைக்குடி (சிவகங்கை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 4, திருவாடானை (ராமநாதபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), தொண்டி (இராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கொடவாசல் (திருவாரூர்), பாண்டவையார்  (திருவாரூர்), தஞ்சாவூர், கன்னியாகுமரி (கன்னியாகுமரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அரிமளம் (புதுக்கோட்டை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பொன்னேரி (திருவள்ளூர்), கொட்டாரம் (கன்னியாகுமரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), ரூமங்கலம் (இராமநாதபுரம்), பட்டுக்கோட்டை, கல்லந்திரி (மதுரை) தலா 3,

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

31.10.2021 , 01.11.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும்   இலங்கை கடற் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

31.10.2021 முதல் 03.11.2021 வரை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

04.11.2021: லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Trending News